யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகின்றது.
தொடர்ந்து நீடித்த வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் கன மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது தொடரும் மழையால் வீதிகளில் வெள்ள நீர் ஓடுவதைக் காண முடிகின்றது.
யாழ். நகரப் பகுதியில் நீண்ட நாள்களுக்குப் பின்னர் கன மழை தற்போது பொழிகின்றது.