யாழ்.துன்னாலையில் அதிரடி சுற்றிவளைப்பு; 3 பேர் கைது !

0
187

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை காவல்துறைபிரிவில் துன்னாலைப்பகுதியில் காவல்துறையினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற   துப்பாக்கிச் சூட்டு சம்பவம், பொது மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சட்ட விரோதமாக மணல் கடத்தியமை, வாள் வெட்டுச் சம்பவம், கடற்படையினரோடு மோதலில் ஈடுப்பட்டமை போன்ற செயற்பாடுகளில்  ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடிக்கும் நோக்கிலேயே காவல்துறையினரும் அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

குறித்த சுற்றி வளைப்பானது இன்று அதிகாலை முதல்  காலை 9.30 மணி வரை  இடம்பெற்றுள்ளது.  இதன் போது மேற் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களோடு தொடர்புடைய 3 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் 4 உந்துருளிகள் மற்றும் 2 கென்டர் வகை வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here