மல்லாவியில் முகத்தை மறைத்த குழுவால் தந்தை, மகன் மீது கொடூர வாள்வெட்டு!

0
421

மல்லாவி பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள யோகபுரம் மத்தி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன்   சென்ற மூவரடங்கிய குழு குடும்பஸ்தரின் தலை உட்பட பல இடங்களில் வாளால் வெட்டியதுடன் அவரைக் காப்பாற்ற போராடிய அவரது 15 வயதுடைய மகனையும் வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்த சட்டவிரோத சம்பவம்  புதன்கிழமை மாலை 06.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

மல்லாவி பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள யோகபுரம் மத்தி கிராமத்தில் தனது வீட்டுடன்  நெல் குற்றும் ஆலையினை நடத்தி வரும் குடும்பஸ்தர் ஒருவர் அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் கால் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த வேளை பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வாள்களுடன் வந்த மூன்று பேர் அவர் மீது சரமாரியாக வாள்வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது அதனை தடுக்க முனைந்த  பாடசாலை செல்லும் அவரது மகன் மீதும் வாள்வெட் டுத்தாக்குதலை மேற்கொண்டதுடன் கணவரையும், மகனையும் காப்பாற்ற முனைந்த குடும்பப் பெண் மீது தடிகளால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் யோகபுரம் மத்தி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்றழைக் கப்படும்  செல்வநாயகம்-பாஸ்கரன்  (வயது -49) என்ற குடும்பஸ்தரும்  மற்றும்  அவரது மகனான பாஸ்கரன்-சுலக்சன் (வயது-15) என்ற பாடசாலை மாணவருமே படுகாய மடைந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற மல்லாவி பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் சம்பவ இடத்தில்  இருந்து தாக்குதல் குழுவினால் கை விட்டுச்  சென்ற தடயப் பொருட்களை மீட்டுள்ளதுடன்  தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக  பொலிஸார் மேலும்  தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here