பிரிந்து செல்­வ­தென்­பது எமக்கே நஷ்டமாக அமையும் : சி.வி.விக்கினேஸ்வரன்

0
347

அர­சியல் ரீதி­யாக முக்­கி­ய­மான கட்­டத்தில் இருக்கும் நாம் இச் சூழ்­நி­லையில் தனி­பட்ட குரோ­தங்­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் வைத்து பிரிந்து செல்­வ­தென்­பது எமக்கே நஷ்டமாக அமையும் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரி­வித்­துள்ளார்.

தமி­ழ­ரசு கட்சி தவிர்ந்து தமிழ் கட்­சிகள் தமிழ் மக்­க­ளுக்கு மாற்றுத் தலைமை  ஒன்று ஏற்­பட வேண்டும் என்­பது தொடர்­பாக பேசி­வ­ரு­கின்ற நிலையில் இது தொடர்­பாக உங்­களின் நிலைப்­பாடு எவ்­வாறு உள்­ளது என முத­ல­மச்­ச­ரிடம் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்ட விட­யத்தை தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் இது விட­ய­மாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

நாங்கள் தற்­போது முக்­கி­ய­மான கட்­டத்தில் இருக்­கின்றோம். எங்­க­ளு­டைய அர­சியல் ரீதி­யான பிரச்­ச­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும். இந்­நி­லையில் எந்த விதத்­திலும் எமது தனிப்­பட்ட குரோ­தங்­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் வைத்­துக்­கொண்டு பிரிந்து செல்­வ­தென்­பது எமக்கே நஷ்டமாக அமையும். இச் சந்­தர்ப்­பத்தில் எந்­த­வி­த­மான பிரி­வி­னைக்கும் நாம் இட­ம­ளிக்க கூடாது. என தெரி­வித்தார்.

இதே­வேளை தற்­போது பேசப்­ப­டு­கின்ற மாற்றுத் தலைமை தொடர்­பான பேச்­சுக்கள் உங்­களை மையப்­ப­டுத்­தியே இடம்­பெ­று­வதால் அத்­த­கைய மாற்றுத் தல­மைக்­கான கோரிக்கை உங்­க­ளிடம் விடுக்­கப்­பட்டால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா என வினாவிய போது, அந்த நேரத்தில் அது தொடர்பாக பார்ப்போம் என முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பதிலளித்திருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here