கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு வாருங்கள்:ஹக்கீம் அழைப்பு!

0
244

showImageInStoryகிழக்கு மாகாண சபையில் சர்­வ­கட்சி தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஐக்­கிய தேசிய

கட்­சிக்கும் அழைப்பு விடுக்­கின்றோம். கூட்­ட­மைப்பும் ஐ.தே.க.வும் கிழக்கு மாகாண சபை அமைச்­ச­ர­வை­யிலும் பங்­கேற்­க­வேண்டும் என்று அமைச்­சரும் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் பேசும் மக்கள் ஒன்­றித்து பய­ணிக்­க­வேண்டும். எங்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டு­களை களைந்­து­கொள்­ள­வேண்டும். அர­சியல் ரீதி­யாக விட்­டுக்­கொ­டுப்பு என்ற விட ­யத்தில் ஒவ்­வொரு கட்­சிக்கும் சில எல்­லைகள் இருக்­கலாம். எங்­களைப் பொறுத்­த­வரை முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் விட்­டுக்­கொ­டுப்­புக்கு இட­மில்லை. அத­னால்தான் இந்த முடி­வுக்கு வர­வேண்­டி­யேற்­பட்­டது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் கூட்­ட­மைப்பு விடாப்­பி­டி­யாக நின்­ற­

போ­து­கூட அதனை எஞ்­சிய காலத்­துக்கு இரண்­டாக பகிரும் மாற் றுத் திட்­டத்தை நாங்கள் கூறினோம். கூட்­ட­மைப்பு அதனை நிரா­க­ரித்­து­விட்டு மிகவும் பிடி­வா­த­மாக இருந்­தது.

எக்­கா­ர­ணம்­கொண்டு கூட்­ட­மைப்­பை­விட்டு ஆட்­சி­ய­மைக்க நாங் கள் விரும்­ப­வில்லை. அத­னால்தான் இந்த கோரிக்­கை­யையும் முன்­வைத்தோம். ஆனால் கூட்­ட­மைப்பு

ஏற்­க­வில்லை

என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் அமைந்­துள்ள கட்­சியின் தலை­மை­க­மான தாரு­ஸ­லாமில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் புதிய முத­ல­மைச்­ச­ராக ஹாபிஸ் நஸீர் அகமட் பத­வி­யேற்ற பின்னர் ஏற்­பட்ட சர்ச்சை நிலை­யை­ய­டுத்து இந்த செய்­தி­யாளர் மாநாடு நடத்­தப்­பட்­டது. புதிய முத­ல­மைச்சர் நஸீட் அகமட் சர்ச்­சைக்­குள்­ளான கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் ஜெமீல் உள­ளிட்ட பலர் இந்த செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்­பி­டு­கையில்

ஐ.ம.சு.மு. வுடன் உடன்­ப­டிக்கை

கிழக்கு மாகாண சபையில் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியை சேர்ந்த பொறி­றி­ய­லாளர் ஹாபிஸ் நஸீட் அகமட் பத­வி­யேற்­றுக்­கொண்­டுள்ளார். கிழக்கு மாகாண சபையில் மிகுதி இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு முத­ல­மைச்சர் பதவி கிடைக்­க­வேண்டும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் எங்­க­ளுக்கு உடன்­ப­டிக்கை உள்­ளது. அதற்­கேற்­பவே இந்த செயற்­பாடு இடம்­பெற்­றுள்­ளது.

ஜனா­தி­ப­திக்கு நன்றி

உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் இதனை நிறை­வேற்­று­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னதும் புதிய தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எமது நன்­றி­களை தெரி­விக்­கின்றோம். இந்­நி­லையில் மத்­திய அர­சாங்­கத்தில் புதிய அர­சியல் கலா­சாரம் ஏற்­பட்­டுள்­ளது.

பட்­ஜட்­டுக்கு ஆத­ரவு கிடைக்கும்

இடைக்­கால வரவு செல­வுத்­திட்­டத்­துக்கு அனைத்துக் கட்­சி­களும் ஆத­ரவு வழங்­கி­யுள்­ளன. அதே­போன்று 10 ஆம் திகதி திரு­கோ­ண­ம­லையல் அமைந்­துள்ள கிழக்கு மாகாண சபையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு செலவு திட்­டத்­து­ககும் அனைத்து கட்­சி­களும் ஆத­ரவு வழங்கும் என்ற நம்­பு­கின்றோம்.

கிழக்கில் சர்­வ­கட்சி அர­சாங்கம்

மேலும் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின்னர் சர்­வ­கட்சி தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் உறு­தி­ய­ளித்­துள்­ளனர். அதன்­படி இந்த சர்­வ­கட்சி தேசிய அர­சாங்­கத்­துக்கு முன்­மா­தி­ரி­யாக முன்­னு­தா­ர­ண­மாக செயற்­ப­டு­வ­தற்கு கிழக்கு மாகாண சபைக்கு சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது.

கூட்­ட­மைப்பு ஐ.தே.க.

எம்­முடன் இணை­ய­வேண்டும்

எனவே அதனை நடை­மு­றைப்­ப­டுத்­த­வ­தற்கு யதார்த்­த­மாக்­கு­வ­தற்­காக கிழக்கு மாகாண சபையின் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்­துடன் இணைந்­து­கொள்­ளு­மாறு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் அழைப்பு விடுக்­கின்றேன். அதன்­படி அமைச்­ச­ர­வையில் இணைந்­து­கொண்டு அமைச்சுப் பத­வி­களை பெற்­றுக்­கொள்ள வரு­மாறு தமிழ்க் கூட்­ட­மைப்­புக்கும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் அழைப்பு விடுக்­கின்றோம்.

திறந்த அழைப்பு

கிழக்கு மாகாண சபையில் அனைத்து கட்­சி­களும் ஆட்­சி­ய­மைத்து ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்­துவோம். கிழக்கு மாகாண சபையில் அனைத்து அமைச்சுப் பத­வி­க­ளையும் வகிக்கும் எண்ணம் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு இல்லை. எனவே அமைச்­ச­ர­வையில் பங்­கேற்க வரு­மாறு கூட்­ட­மைப்­புக்கும் ஐக­கிய தேசிய கட்­சிக்கும் அழைப்பு விடுக்­கின்றோம். மிகவும் வெளிப்­ப­டை­யா­கவும் திறந்த மன­து­டனும் இந்த அழைப்பை விடுக்­கின்றோம். எம்­முடன் வந்து இணைந்­து­கொண்டு ஆத­ரவு தாருங்கள்.

ஜெமீல் விவ­காரம் முடிந்­தது

இதே­வேளை சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் ஏ.எம். ஜெமீல் முத­ல­மைச்சர் பதவி விவ­கா­ரத்தில் முரண்­படும் நிலை உரு­வா­னது. எனினும் அவர் தனது தவ­றுக்கு என­னிடம் மன்­னிப்பு கோரினார். எனவே அவரின் மன்­னிப்பை ஏற்று அவரை மீண்டும் கட்­சியில் இணைத்­துக்­கொண்­டுள்ளோம். அவ­ருக்கு எதி­ராக செய்­யப்­பட்­டி­ருந்த கட்சி உறுப்­பு­ரிமை நீக்கம் மற்றும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை என்­ப­ன­வற்றை ரத்துச் செய்­துள்ளோம். அவர் மீண்டும் புதிய முத­ல­மைச்­சரின் கீழ் கட்­சியில் செயற்­பாட்டு ரீதி­யான பங்­க­ளிப்பை வழங்­குவார். இது மகிழ்ச்­சி­யான செய்­தி­யா­க­வுள்­ளது.

கேள்வி கிழக்கில் ஆட்­சி­ய­மைப்­பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நடத்­திய பேச்­சு­க­ளுக்கு என்ன நடந்­தது?

பதில் கிழக்கு மாகாண சபையில் மிகுதி இரண்­டரை வரு­டங்­களை சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முத­ல­மைச்சர் பத­வியில் இருக்­க­வேண்டும் என்ற உடன்­ப­டிக்கை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் எமக்கு இருந்தும் நாங்கள் முதலில் தமிழ் கூட்­ட­மைப்­பு­ட­னேயே பேச்சு நடத்­தினோம். கூட்­ட­மைப்­புடன் சேர்ந்து கலந்­து­ரை­யாடி உடன்­பாட்­டுக்கு வந்த பின்­னரே ஐ.ம.சு.மு. வுடன் பேசலாம் என்று எண்­ணினோம்.

திருப்­தி­க­ர­மான முடி­வுகள்

எட்­டப்­ப­ட­வில்லை.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மப்­புக்­கும்­எங்­க­ளுக்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையில் திருப்­தி­க­ர­மான முடி­வுகள் எட்­டப்­ப­ட­வில்லை. எனவே அது சாத்­தி­ய­மா­க­வில்லை என்ற மனக்­குறை எங்­க­ளுக்கு இருந்­தது. எனினும் முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் ஏற்­பட்ட இழு­பறி கார­ண­மாக இது நிறை­வே­ற­வில்லை. இது வருந்­த­தக்க விடயம். தற்­போது நாங்கள் ஐ.ம. சு..மு.வுடன் இணைந்து கிழக்கில் ஆட்­ச­ய­மைத்­தி­ருந்­தாலும் எங்­க­ளது ஆரம்ப விருப்பம் கூட்­ட­பை்­புடன் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தா­கவே இருந்­தது. இருந்தும் தற்­போது கூட சகல கட்­சி­க­ளையும் இணைத்த சர்­வ­கட்சி தேசிய அர­சாங்கம் அமைக்­க­வேண்டும் என்ற தீர்­மா­னத்தில் மாற்றம் இல்லை. கிழக்கு மாகாண சபை அர­சாங்­கத்தில் வந்து அமைச்சுப் பத­வி­களை பகிர்ந்­து­கொள்­ள­வேண்டும் என்று அழைப்பு விடுக்­கின்றோம்.

கேள்வி கூட்­ட­மைப்­புக்கு அதிக ஆச­னங்கள் உள்­ளன. எனவே கூட்­ட­மைப்­புக்கு முத­ல­மைச்சர் பத­வியை கொடுத்து தேசிய அர­சாங்கம் அமைத்­தி­ருக்­க­லாமே?

பதில் கடந்த மாகாண சபைத் தேர்தல் முடிவில் ஐ.ம.சு.மு. மிகுதி இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு முத­ல­மைச்சர் பத­வியை எமக்கு தரு­வ­தாக இருந்­தது. அதனை புறந்­தள்­ளி­விட்டு நாங்கள் பெருந்­தன்­மை­யுடன் கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க தயா­ரானோம். ஆனால் தற்­போது துர­திஷ்­ட­வ­ச­ட­மாக சில காட்­ட­மான விமர்­ச­னங்­களை அவர்கள் முன்­வைத்­துள்­ளனர். ஏள­ன­மான கதை­கள்ங பேசப்­பட்­டுள்­ளன.

முத­ல­மைச்சர் எமக்கு உரித்­தா­னது

அவற்றை நாங்கள் பொருட்­ப­டுத்­த­வில்லை. எனங்­களை பொறுத்­த­வரை சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் முத­ல­மைச்சர் பத­வியை பெற முழு­மை­யான உரி­மையை கொண்­டுள்­ளது. ஆசன ரீதி­யாக இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியின் அங்­கீ­கா­ரத்­துடன் ஆட்­சி­ய­மைத்­து­ளளோம். ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைக்கு நிலையை விளக்­கி­யுள்ளோம். கூட்­டாக நாங்கள் உரு­வாக்­கிய ஜனா­தி­ப­தியின் கொள்­கை­களை மாகாண மட்­டத்­திலும் அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்ற விருப்­பத்­துடன் இந்த அழைப்பை விடுக்­கின்றோம்.

ஒன்­றித்து பய­ணிக்­க­வேண்டும்

கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் பேசும் மக்கள் ஒன்­றித்து பய­ணிக்­க­வேண்டும். எங்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டு­களை களைந்­து­கொள்­ள­வேண்டும். அர­சியல் ரீதி­யாக விட்­டுக்­கொ­டுப்பு என்ற விட­யத்தில் ஒவ்­வொரு கட்­சிக்கும் சில எல்­லைகள் இருக்­கலாம். எங்­களைப் பொறுத்­த­வரை முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் விட்­டுக்­கொ­டுப்­புக்கு இட­மில்லை. அத­னால்தான் இந்த முடி­வுக்கு வர­வேண்­டி­யேற்­பட்­டது. ஆனால் கூட்­ட­மைப்­பினர் எம்­முடன் கலந்­து­பேசி அர­சுடன் இணைந்­து­கொள்­ளலாம். கூட்­ட­மைப்­புடன் தொடர்ந்தும் பேசு­வ­தற்கும் தயா­ராக இருக்­கின்றோம்.

கேள்வி இதற்கு முன்­னரும் கூட்­ட­மைப்­புடன் ஆட்­சி­ய­மைக்க சந்­தர்ப்பம் கிடைத்­தது. ஆனால் நிறை­வே­ற­வில்லை. இம்­மு­றையும் முடி­ய­வில்லை. இது ஏமாற்றம் இல்­லையா?

பதில் ஏமாற்றம் என்று எவ்­வாறு கூற முடியும்? முத­ல­மைச்சர் பத­வியை கூட்­ட­மை­ப­புக்கு வழங்­கு­வ­தாக சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மக்­க­ளிடம் வாக்­கு­க­ளை­கோ­ர­வில்லை. அதற்­கான ஆணையும் கிடைக்­க­வில்லை. கூட்­ட­மைப்­பு­ககு முத­ல­மைச்சர் பத­வியை கொடுக்க நாங்கள் மக்கள் ஆணை கோர­வில்லை.

வருத்­தத்­துக்­கு­ரிய விடயம்

சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முத­ல­மைச்சர் பெறு­வ­தற்கே எங்­க­ளுக்கு மக்கள் ஆணை கிடைத்­தது. அந்த ஆணைக்கு மாறாக சென்று அந்த விட­யத்தை செய்ய முடி­யாது. தெளி­வான நிலைப்­பாட்டில் இருக்­கின்றோம். எனினும் சில விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுக்கு நாங்கள் தயா­ராக இருந்தோம்.

முத­ல­மைச்சர் பத­வியை பங்­கிட்­டுக்­கொள்­ளவும் நாங்கள் தயா­ராக இருந்தோம். ஆனால் அதற்கு அவர் தயா­ரா­க­வில்லை. அதனை நிரா­க­ரித்­தார்கள். முழுப் பத­விக்­கா­லமும் தங்­க­ளுக்கே வேண்டும் என்று இருந்­தனர். அது வருத்­தத்­துக்­கு­ரிய விடயம்.

கேள்வி கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்கள் இருவர் மு.கா. வுடன் இணைந்­து­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில் அதனைப் பறறி அவர்­க­ளிடம் கேட்­க­வே­ணடும். அவ­ச­ரப்­பட்டு அறிக்கை விட விரும்­ப­வில்லை. காலம் வரும்­போது விட­யங்கள் அம்­ப­லத்­துக்­கு­வரும்.

கேள்வி கிழக்கு மாகாண சபையில் தமி­ழ­ருக்கு அமைச்சுப் பதவி கிடைக்­க­வில்லை என்ற குற்றச் சாட்டு இருந்­தது?

பதில் கடந்த மாகாண சபையில் முன்னாள் முத­ல­மைச்சர் பிள்­ளை­யா­னுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க தயா­ரானோம். ஆனால் அவர் அதனை விரும்­ப­வில்லை. இம்­முறை கூட்­ட­மைப்­பினர் புரிந்­து­ணர்­வு­டனும் விட்­டுக்­கொ­டு­ப­பு­டனும் எங்­க­ளுடன் இணைந்து அமைச்சுப் பத­வியை பெற்று கிழக்கு மாகாண த்தில் புதிய அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்த வர­வேண்டும். மிகவும் சினே­க­பூர்­வ­மாக இந்த அழைப்பை விடுக்­கின்றோம். கடந்த காலங்­களில் நடந்த விட­யங்­களை தற்­போது பேசி இரண்டு தமிழ் பேசும் சமூ­கங்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களைக் கொண்­டுள்ள கட்­சிகள் தமக்­கி­டையில் தேவை­யற்ற பிணக்­கு­களை கொண்டு செல்­வது ஆரோ்­கி­ய­மாக அமை­யாது என்­ப­தனை உணர்ந்­துள்ளோம்.

கேள்வி எஞ்­சி­யுள்ள இரண்டு வரு­டங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பும் மு.கா. முத­ல­மைச்சர் பத­வியை பகிர்ந்­து­கொள்ள பேசப்­பட்­டதா?

பதில் அது தொடர்­பாக பேசப்­பட்­டது. முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் கூட்­ட­மைப்பு விடாப்­பி­டி­யாக நின்­ற­போ­து­கூட இந்த மாற்றுத் திட்­டத்தை நாங்கள் கூறினோம். அத­னையும் அவர்கள் ஏற்­க­வில்லை. நிரா­க­ரித்­து­விட்டு மிகவும் பிடி­வா­த­மாக இருந்­தனர். காரணம் எக்­கா­ர­ணம்­கொண்டு கூட்­ட­மைப்­பை­விட்டு ஆட்­சி­ய­மைக்க நாங்கள் விரும்­ப­வில்லை. அத­னால்தான் இந்த கோரிக்­கை­யையும் முன்­வைத்தோம்.

கேள்வி உறுப்­பினர் ஜெமீல் விவ­காரம் ?

பதில் சவா­லாக இல்­லாத எந்த விட­யத்­தையும் நாங்கள் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை. மு.கா. ஏன் இந்த முடிவை எடுத்­தது என்­ப­தற்கு சகோ­தரர் ஜெமீ­லுக்கு நான் விளக்கம் கொடுத்­துள்ளேன்.

கேள்வி ஜனா­தி­பதி தேர்­தலில் மு.கா. மைத்­தி­ரி­பா­ல­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யது. எனினும் தவி­சாளர் முரண்­பட்டு நின்­றாரே?

பதில் இந்த விவ­காரம் தொடர்பில் நான் தவி­சா­ளரை சந்­தித்து நிலைப்­பா­டு­களை கேட்­டி­ருந்தேன். அவ­ரு­டைய எதிர்­கால அர­சியல் தொடர்­பாக அவர் சில தீர்­மா­னங்­க­ளுக்கு வர­வேண்டும். மு.கா. எவ­ரு­டைய நட­வ­டிக்­கை­யாக இருந்­தாலும் அவ­தா­ன­மாக செயற்­படும். கட்­சிக்கு பாத­க­மில்­லாமல் நட­வ­டிக்கை எடுக்கும் எங்கள் கைங்­க­ரியம் தொடரும். கட்­சிக்கு எதி­ராக தீர்­மா­னத்­துக்கு எதி­ராக நடந்­து­கொள்­ப­வர்கள் அவர்­க­ளாக தேடி­க­கொள்­கின்ற அனர்த்­தங்­க­ளாக இருக்­கலாம். என்னை பொறுத்­த­வரை மு.கா. வலிய நட­வ­டிக்கை எடுத்­துத்தான் எல்­லா­வற்­றையும் திருத்­த­வேண்டும் என்று இல்லை. தேர்தல் முடி­வுகள் மக்கள் தீர்ப்­புகள் என்­பதும் சில விட­யங்­க­ளுக்கு தீர்வு கொடுக்கும். இந்த விட­யங்கள் குறித்து அலட்­டிக்­கொள்­ள­வில்லை.

கேள்வி கடந்த வௌ்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஆர்ப்­பாட்டம்?

பதில் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­கின்ற ஜன­நா­யக உரி­மையை சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்க்­காது. யாரு­ககும் எல்­லா­வற்­றையும் செய்யும் உரிமை உள்­ளது. இது சர்­வா­தி­காரப் போக்கில் நடக்கும் இயக்கம் அல்ல. யார் ஆர்ப்­பாட்டம் செய்­தாலும் எடுத்த முடி­வு­களை பயந்து மாற்றும் தலைமையும் இல்லை. சாய்ந்த மருதை பொறுத்தவரை துணிவாக நிஜாமுடீன் முன்னாள் மேயர் மீரா சாஹிப் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கேள்வி கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நடத்திய கூட்டத்தில் உங்கள் கட்சியின் ஒருவர் குழப்பியதாக குற்றச்சாட்டு முன்வைக்கபப்பட்டதே?

பதில் குறுஞ்செய்தி ஊடாக குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. பொறுப்புள்ள கட்சி நேரடியாக முறைப்பாடுகளை செய்யவேண்டும். பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யலாம். அதனைவிடுத்து வங்குரோத்து அரசியல் செய்யக் கூடாது. பொலிஸாரின் விசாரணைகைள தடுக்க முற்படமாட்டோம். மு.கா. நேர்மையாக அரசியல் செய்யும் கட்சி. எனவே எஸ்.எம்.எஸ் . குறித்து நான் ஒன்றும் செய்ய முடியாது.

கேள்வி கிழக்கில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க முடியுமா?

பதில் அதில் எந்த சிக்கலும் இல்லை. நாங்கள் நிரூபிப்போம். ஆனால் கூட்டமைப்புக்கும் ஐ.தே.க.வுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

கேள்வி தவிசாளர் அறிக்கைகளை விடும்போது அவரின் பதவியை கருத்திற்கொண்டு விடுககும்படி கூற முடியாதா?

பதில் இதனை அவரிடம்தான் கேட்கவேண்டும். நானும் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் பாலக்குமார் என்கிற முன்னாள் ஈரோஸ் தலைமையின் கீழ் பணியாற்றிய ஒருவர் என்ற அடிப்படை்யில் அவருக்கு தனிப்பட்ட உணர்வுகள் விருப்பங்கள் இருக்கலாம். அது தொடர்பில் மு.கா. தலைமை எதனையும் கூறவேண்டியதில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here