முப்பதாவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் !!

0
110

கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முப்பதாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாயொருவர் மயக்கமடைந்து வீழ்ந்தமையால் அங்கு பதற்ற நிலை நிலவியது பின்னர் வடமாகாண நோயாளர் காவுவண்டி நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து சில நிமிடங்களில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலை நோயாளர் காவுவண்டி மூலம் குறித்த தாயார் வைத்தியசாலைக்கு அனுப்பப் பட்டுள்ளார்
குறித்த தாயார் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையின் நினைவுகள் வரும்போதெல்லாம் இவ்வாறு மயக்கமடைபவர் என்பதுடன் இதற்காக பிரத்தியேக வைத்தியர் மூலம் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here