வவுனியாவில் தொடர் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 12 ஆவது நாளாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இன்று காலை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர். ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும்போராட்டம் இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட தமது உறவுகளை ஒப்படைக்குமாறும் அவசர காலச்சட்டத்தினை நீக்குமாறும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும் தெரிவித்து தமது போராட்டத்தினை இன்று 12 ஆவது நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
Home ஈழச்செய்திகள் 12 வது நாளாக தொடரும் காணாமற்போன உறவுகளின் போராட்டம் மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஆதரவு .



