மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இன்று உச்சநீதிமன்றம் ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. எனினும், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 21 ஆண்டில் இன்று சசிகலாவை குற்றவாளி என்று தீர்ப்பெழுதப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் சூழலில் பல மாற்றங்களை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.