முதுபெரும் தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார்

0
170

தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் உள்பட ஏராளமான நூல்களை இயற்றிய முதுபெரும் தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார்.அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர் மணவை முஸ்தபா.
இவர் எழுதிய “இசுலாமும் சமய நல்லிணக்கமும் ” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசு பெற்றது.
இவர் எழுதிய மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்” எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டிலில் முதல் பரிசும் பெற்றுள்ளது.தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் உள்பட ஏராளமான நூல்களை இயற்றியிருக்கிறார்.
அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார். அதன் மூலம் இணைய நூலகமும் தற்போது இயங்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here