வவுனியா தேக்கவத்தையில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

0
568
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஒருசில நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த 25 வயதுடைய பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்ற குடும்பஸ்தரே நேற்று பிற்பகல் 3மணியளவில் சில நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி கொலைச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. சம்பவ இடத்தில் விரைந்த  வவுனியா  பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த குடும்பஸ்தரின் தாய், தந்தையினர் சுவிஸ் நாட்டில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி நயினாதீவில் வசித்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் வருகைதரவுள்ளதாக குறிப்பிட்ட நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று நள்ளிரவு வரை அங்கேயே வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை தாக்குதலாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகளையும் தேடுதல்களையும் அப்பகுதிகளில் நேற்று முடுக்கி விட்டிருந்தமைமையையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here