யாழில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கொழும்பில் மறியல்!

0
151
aaaa-prisonபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (ரி.ஐ.டி) அண்மையில் யாழில் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றையதினம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரவினரால் யாழ்ப்பாணத்தில் கடந்த 5,6,7 ஆம் திகதிகளில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு 2 மற்றும் 6 ஆம் மாடிகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களில் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்ட கெங்காதரன் பிருந்தாபன், அரவிந்தன் அலெக்ஸ், சிவலிங்கம் கமலகாந்தன் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து நேற்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இவர்களின் கைது தொடர்பில் சட்டமாஅதிபர் திணைக்களத்தில் இருந்து ஆலோசனைகள் கிடைக்கப்பெறாததால் இவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தர விடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here