முதல் முறையாக இந்தியா பாகிஸ்தான் மீது விமான தாக்குதல்..!

0
305

Jet-plance-attacksபாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இந்தியா நேற்று அதிகாலை விமான தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் பாகிஸ்தான் தீவிரவாத முகாமை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்திகள் தெரிவித்துள்ளன.

யூரி தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 17பேர் பலியானார்கள்.

அப்பொழுதும் கண்டனம் தெரிவித்து வந்த இந்தியா பாகிஸ்தானை சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தவே முயற்சிகள் செய்து வந்தது.

ஆனால், பாகிஸ்தான் நேற்று நள்ளிரவில் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது விமானப்படை தாக்குதலை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாகிஸ்தான் மீதான தாக்குல்களுக்கு பதிலடி தொடர்வதற்கு பிரதமர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல்கள் இந்திய எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன். இரு நாடுகளுக்கிடையிலும் போர் மூளும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here