வட்டுக்கோட்டையில் கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு!

0
552
well 444ddஅராலி தெற்கு வட்டுக்கோட்டையில் அயல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த முன்பள்ளி சிறுவன் ஒருவன் தவறுதலாக அங்கிருந்த கிணற்றுக்குள்ளே விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இதில் அதே இடத்தினைச் சேர்ந்த சசிகரன் சுதர்சன் (வயது 4) என்ற முன்பள்ளி சிறுவனே உயிரிழந்தவனாவான்.சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் மரணம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here