தமிழர்களின் தாயகம், தமிழீழ தாயகம் என்பதை ஐ.நா மன்றில் உரக்க கூறுவோம். நம்முடைய குரல் என்றென்றைக்கும் விடுதலை குறித்த குரலாகவே அமையும் என வழக்கறிஞருர் அங்கையற்கண்ணியும் கவிஞர் காசி ஆனந்தனும் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ.நா சபை முன்றல் வரை…14.03.2016 திங்கட்கிழமை, மதியம் 14:00 முதல் 17:30 மணிவரை நடைபெறவுள்ள கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு விடுத்துள்ள அழைப்பிலேயே மேற்படி குறிப்பிட்டனர்.


