திருநெல்வேலியில் உந்துருளியில் வந்து ஆசிரியையின் சங்கிலியை அறுக்க முற்பட்ட மாணவன்!

0
236

9087திருநெல்வேலி மணல்தறை லேன் பகுதியில் ஆசிரியையின் தங்கச் சங்கிலியை அறுக்க முயன்ற பாடசாலை மாணவர்களிடம் இருந்து ஆசிரியர் போராடி காயமடைந்து தனது சங்கிலியை மீட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணத்திலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் நேற்றுமுன் தினம் காலை 7.45 மணியளவில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில் பாடசாலை சீருடை அணிந்த உயர்வகு ப்பு மாணவன் ஒருவனும், சாதாரண சீருடை அணிந்த இளைஞன் ஒருவனும் மோட்டார் சைக்கிளில் வந்து குறித்த ஆசிரியரின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆசிரியை சைக்கிளில் இருந்து விழுந்ததுடன் சங்கிலியை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆசிரியைக்கு கழுத்திலும் கையிலும் காயம் உண்டாகியுள்ளது.
எனினும் ஆசிரியர் காயங்களுடன் போராடி சங்கிலியை மீட்டுள்ளார். கூக்குரல் கேட்டு அயலில் நின்றவர்கள் ஓடி வருவதற்குள் சுதாகரித்துக் கொள்ள குறித்த மாணவனும் இளைஞனும் மோட்டார் சைக்களில் ஏறி தப்பி யோடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here