
பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சிறி மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்த 31 ஆவது தேர்த்திருவிழா இன்று 30..08.2026 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. வழமை போன்று இம்முறையும் பிரான்சின் பல பகுதிகள் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்தும் தேர்த்திருவிழாவில் மக்கள் கலந்துகொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாகவும் இருந்தது. இதேவேளை, தமிழீழத் தேசியப் பாடகர்கள், மற்றும் உள்ளூர் கலைஞர்கள் பலரும் குறித்த தேர்ந்த்திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர்.. பொதுமக்களுக்கு வேண்டிய உணவு, குளிர்பானங்கள், குடிநீர் போன்றவை ஆங்காங்கே வழங்கப்பட்டதையும் காணமுடிந்தது. க்கதமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியீட்டுப் பிரிவினரும் நமது வெளியீடுகளளக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
(எரிமலைக்காக பாரிசில் இருந்து – படங்கள் – யூட்)














