பிராங்கோ தமிழ்ச் சங்கம் கொத்தசூர் தமிழர் விளையாட்டு விழா சுமார் 10 வருடங்களின் பின்னர் இன்று 29.08.2026 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு போசோலைப் பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மாணவர்களின் அணி நடை இடம்பெற்று, பிரமுகர்கள் விருந்தினர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட தைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.
அனைத்து மைதான விளையாட்டுக்களோடு, கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல் மற்றும் சங்கீதக் கதிரை போன்ற போட்டிகளும் விறுவிறுப்பாய் அமைந்திருந்தன.
நிறைவாக வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
(எரிமலை செய்திப் பிரிவு )












