
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று 17ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

மகோற்சவத் திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் 26ஆம் திகதியும் , 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா செப்ரெம்பர் 07ஆம் திகதியும் , 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா செப்ரெம்பர் 09ஆம் திகதி காலையும் , மறுநாள் 10ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று , மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும் என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆலயத்தின் வைரவர் விழா நேற்று இடம்பெற்ற போது, ஆலயத்தின் பிரதான கோபுரம் விசேட அலங்கார மின் விளக்குகளால் மிளிர்ந்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.






