
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் இன்று(16) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் கடந்த 14.08.2026 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி செம்மணிச் சந்தியில் இரவு பகலாக இடம்பெற்று வருகிறது.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரும் இந்தப் போராட்டம், நாளை 17 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.





