கனடாவில் சாவடைந்த ஊடகவியலாளர் சபேசனின் இறுதி நிகழ்வு யாழில்!

0
26

கனடாவில் கடந்த 30.07?2026 அன்று காலமான ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13.08.2026 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக , தனது 47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி கனடாவில் சாவடைந்தார்.

கடந்த 06.08.2026 வியாழக்கிழமை கனடாவில் அவரது உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவரது பூதவுடல் தாயகத்துக்கு கொண்டுவரப்பட்டு, நாளைமறுதினம் புதன்கிழமை அஞ்சலிக்காக யாழ்.கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கும்.

மறுநாள் வியாழக்கிழமை இறுதி கிரியைகள் இடம்பெற்று , தகன கிரியைகளுக்காக பூதவுடல் , கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here