
தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வலியுறுத்தியும் நடைபெறும் தொடர் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இன்றைய போராட்டம் மாலை 4.00 மணி வரை நடைபெறும்.
தொடர்ந்து நாளை (பௌர்ணமி தினம்) காலை 7.00 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் இப்போராட்டம் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

மேலும், இன்று மாலை 4.00 மணிக்கு செம்மணியில் நடைபெறும் போராட்டத்திலும் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.









