
பல தவில்-நாதஸ்வர ஜாம்பவான்களை உலகிற்கு தந்த யாழ் மண்ணில் மற்றுமொரு ஜாம்பவானாக வளர்ந்துவந்த சாவகச்சேரியைச் சேர்ந்த “தவில் ஞான வேந்தன்” சச்சின் பிரசாத் (வயது 24) என்ற இளவயதுத் தவில் கலைஞன் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்ததாக அறியமுடிகிறது.
இளம் வயதிலேயே இத்தகைய ஆற்றலுள்ளோர் உயிரை மாய்த்துக்கொள்வது வேதனையான ஒரு விடயம் என பலரும் தமது கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம்கூட சச்சின் ஒரு மிகப்பெரிய கச்சேரியில் உற்சாகமாக கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் தவில் இசைத்துறையில் குறுகிய காலத்திற்குள் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்து வளர்ந்து வரும் ஒரு திறமையான இளம் தவில் வித்துவான் சச்சினின் இழப்பு கலையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தவில் வித்துவானின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.






