
வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்
மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பிகையின் உயர் திருவிழா 2026 நாளை 15.06.2026 திங்கட்கிழமை கொடியோற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 15 நாட்கள் இத் திருவிழா இடம்பெறவுள்ளது.
27.06.2026 சனிக்கிழமை சப்பரத் திருவிழாவும், 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை இரதோற்சவமும், 29.06..2026 திங்கட்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்தோடு திருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.

இம்முறையும் பெரும் எண்ணிக்கையான அடியார்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த காலங்களில் திருவிழாவின் போது இடம்பெற்ற குறைகளை கருத்தில்கொண்டு இதனை நிவர்த்தி செய்ய விசேட நடைமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்துடன். இதற்கான விசேட போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.








