பிரான்சில் கிறித்தெய் நகரில் பிராங்கோ தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடத்திய 26வது ஆண்டு விழா கடந்த 18/04/26 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
வரவேற்பு விளக்கேற்றலோடு பி.ப 2.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி, அகவணக்கம் செய்த பின்பு அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
தொடர்ந்து தமிழ்ச்சோலைக் கீதம் இசைக்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் தொடர்ந்தன. நடனம், நாடகம், எழுச்சிப்பாடல் நடனம், பட்டிமன்றம்,காவடி எனப் பல நிகழ்வுகளை மாணவர்கள் ஆற்றியிருந்தனர்.சிறுவர்கள் தமிழ் மொழியைப்பற்றி அழகு தமிழில் கவிதை, பேச்சு ஆற்றியிருந்தது எல்லோரையும் கவர்ந்தது.
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு. நாகஜோதீஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றியிருந்தனர்.
வரவேற்புரை, நன்றியுரை, அறிவிப்பு தமிழ் பிரெஞ்சு மொழியில் இளையோரால் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டுக் கூறக்கூடியது. இரவு 9.30 மணியளவில் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
Home புலத்துச்செய்திகள் பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற கிறித்தெய் பிராங்கோ தமிழ்ச்சங்க தமிழ்ச்சோலையின் 26வது ஆண்டு விழா!

