யாழில் படைமுகாம்கள் விடுவிக்கப்படாததால் 400 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில்!

0
160

valikamam-northஉயர்பாதுகாப்பு வலயமாக இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுடைய குடிமனைகளை மையப்படுத்தி சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள 2 இராணுவ படைமுகாம்கள் இன்னும் விடுவிக்கப்படாததால்  அப்பகுதியினைச் சேர்ந்த 400 குடும்பங்கள் இன்றுவரைக்கும் மீள்குடியேறிக் கொள்ள முடியாமல் நலன்புரி முகாம்களில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (02) பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான விளக்கமளிப்பினை வழங்கிய பிரதேச செயலர் சிறிமோகனினாலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here