
யா/ஹாட்லிக்கல்லூரியின் தமிழ் ஆசிரியை திருமதி நிஷாந்தினி நித்திலவர்ணன் நேற்று பகல் வீட்டில் தீ விபத்தில் எரிகாயமடைந்து பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ,
இன்றையதினம் காலை சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த யா/ஹாட்லிக்கல்லூரியின் தமிழ் ஆசிரியை திருமதி நிஷாந்தினி நித்திலவர்ணன் (வயது 43 ) என்ற இளம் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமாவார்.

யாழ். பல்கலைக்கழக கல்வியியற்றுறை தலைவர் கலாநிதி Dr.A. நித்திலவர்மணன் அவர்களின் துணைவியாரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரும் ஆவார்.
சடலம் உடற்கூற்றுச் சோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் வடமராட்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (12.12.2025) காலை பருத்தித்துறையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


