தமிழீழத் தேசிய மாவீரர் நாள 2025 இனை உணர்வுபூர்வமாக நினைவேந்தும் முகமாக தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளினை உணர்வு பூர்வமாக நினைவேந்தும் முகமாக பணிக்குழுவினால் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.







