பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற ஆசிரியர் செயலமர்வு – 2025

0
133

பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தால் ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ் ஆசிரியர்களுக்கான செயலமர்வு, இன்று 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை கொலோம்ப் நகரில், கொலோம்ப் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றது.
இரண்டாம் தொகுதியாக வளர்தமிழ் 6 தொடக்கம் வளர்தமிழ் 12 வரை தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்குகொண்டனர்.
காலை 9.30 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திருமிகு. நாகஜோதிஸ்வரன் தலைமையில் தமிழ்ச் சோலை கீதம் இசைக்கப்பட்டு அகவணக்கத்துடன் தொடங்கிய இந்த நிகழ்வானது மாலை 17.00 மணியளவில் தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் நிறைவடைந்தது.

பாலர் நிலைமுதல் வளர்தமிழ் 5 வரை தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு கடந்த 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை இதே மண்டபத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here