கட்சி பேதமின்றி அனைத்து மக்களையும் தையிட்டி சட்டவிரோத விகாரை முன்பாக அணிசேர அழைப்பு!

0
66

தையிட்டியில் காணி உறுதிகள் எங்களிடம் இருக்கும்படியாக எந்த அனுமதியும் இல்லாமல் விகாரை கட்டி அதற்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்புடன் பூஜை வழிபாடுகள் நடப்பதை ஏன் கண்டுகொள்கின்றீர்கள் இல்லை. நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள விகாரை விழாவின் போது எமது எதிர்ப்பை வெளியிட கட்சி பேதமின்றி உறுப்பினர்களும் அனைத்து பொதுமக்களையும் தையிட்டி விகாரை முன்பாக காலை 6 மணிமுதல் பங்குபற்றுமாறு செல்வராசா கஜேந்திரன் கேட்டுள்ளார் .

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு ஓரிரு வாரங்களில் தீர்வு என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கேள்விக்கு பிமல் அளித்த பதில். தீர்வு வருமோ வரதோ தெரியாது விகாரை அகற்றும் வரை எமது பெளர்ணமி போராட்டம் தொடரும்.என்றார்.

இந்நிலையில் தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரையில் மீண்டும் புதிய கட்டிடங்கள் கட்ட ப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றில் கஜேந்திரகுமாரின் கேள்விக்கு பிமல் ஓரிரு வாரங்களில் தீர்வு என பதிலளித்து ஓரிருநாளில் இந்த ஏற்பாடு நடைபெறுகின்றமை குறிப்பிடதக்கது.

இந்நிலையிலேயே அனைவருக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here