பிரான்சில் இடம்பெற்ற தமிழ்ச்சோலை ஆசிரியர்களுக்கான முதல்நாள் செயலமர்வு – 2025!

0
115

பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தால் ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ் ஆசிரியர்களுக்கான செயலமர்வு, நேற்று 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொலோம்ப் நகரில், கொலோம்ப் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றது..
முதல்த் தொகுதியான மழலையர் நிலை தொடக்கம் வளர்தமிழ் 5 வரையான செயலமர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கு கொண்டனர்.
காலை 9.30 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திருமிகு. நாகஜோதிஸ்வரன் தலைமையில் அகவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்வானது மாலை 17.30 மணியளவில் தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் நிறைவடைந்தது.
வரவேற்புரையை செயலாளர் திரு. காணிக்கைநாதன் வழங்கியிருந்தார்.
தமிழ் ஆசிரியர்களால் மண்டபம் நிறைந்திருக்க, 8 ஆசிரியப் பயிற்றுநர்கள் பயிற்றுரையை வழங்கினர்.

இம்முறையும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பினை தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டக்கல்வியின் இளந்தலைமுறை மாணவர்களே முன்நின்று செய்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் தொகுதி ஆசிரியர்களான வளர்தமிழ் 6 தொடக்கம் 12 வரையான ஆசிரியர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இதே மண்டபத்தில் நடைபெறும் என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here