
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு
21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு, நீதி கேட்பதன் மூலம் சிங்கள பேரினவாத அரசினை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி தமிழின அழிப்பிற்கு நீதியை பெறுவதுடன், தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி 15.09.2025 திங்கட்கிழமை அன்று, “மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” என முழங்கிய தியாக தீபம் லெப்.கேணல். திலீபன் அவர்களின் உண்ணா நோன்பின் ஆரம்ப நாளில் ஜெனிவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவிலிருந்து ஐ.நா சபை முன்றலில் உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை நோக்கி மாபெரும் பேரணி இடம்பெற உள்ளது.
அதனை வலுப்படுத்தும் வகையில் நீதிக்கும், உரிமைக்குமான ஈருருளப்பயணப் போராட்டம் கடந்த 28.08.2025 பிரித்தானியாவில் ஆரம்பமாகிய ஈருருளிப் பயணம் முறையே நெதர்லாந்து, பெல்ஜியம், யேர்மன், பிரான்ஸ் ஊடாக பயணித்து நேற்று (10.09.2025) சுவிற்சர்லாந்து நாட்டில் பாசல் மாநில எல்லையை வந்தடைந்தது.
இன்று (11.09.2025) காலை 9:30 மணிக்கு பாசல் எல்லையில் ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் பாசல், சொலத்தூண், பேர்ண், பிறிபேர்க், வோ, மாநிலங்களை கடந்து எதிர்வரும் (15.09.2025) திங்கட்கிழமை ஜெனிவா ஐ.நா முன்பாக நடைபெற இருக்கும் மக்கள் பேரணியில் இணைய இருக்கின்றது.
சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள், செயற்பாட்டாளர் அனைவரும் உங்கள் மாநிலங்கள் ஊடாக பயணிக்கும் மனிதநேய செயற்பாட்டாளர்களிற்கு ஒத்துழைப்பு நல்கி 15.09.2025 இடம்பெறும் பேரணியில் பங்கெடுக்குமாறு உரிமையோடு கேட்கப்பட்டுள்ளது.
.


