5 ஆவது நாளில் பெல்சியம் நாட்டிற்குள் பயணிக்கும் ஐ . நா. நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம்!

0
248

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானிய தேசத்தில் ஆரம்பித்து ஐ . நா. நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் இன்று ஐந்தாவது நாளில் பெல்சியம் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர்     தொடங்குவதை  முன்னிட்டு  சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி  மனித நேய ஈருருளிப்பயணம்  பிரித்தானியாவில் ஆரம்பித்து, 5 ஆம் நாளான இன்று காலை (01.09-2025) பெல்சியத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுக்கல்லறையில் அகவணக்கத்துடன் மனிதநேய ஈருருளிப்பயணம்  தொடங்கப்பட்டது . இந்த மனிதநேய ஈருருளிப்பயணம் எழுச்சியோடு பயணித்துக்கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here