பிரான்சு பாரிஸ் மாணிக்கம் பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா இன்று 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
இத்திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ்மக்கள் வருகை தந்திருந்தனர்.
இம்முறை தமிழீழ இசைக்குழுவினர் தாயக எழுச்சிப் பாடல்கள் இவ்விழாவில் இடம்பெற்றதுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு வெளியீட்டுப் பிரிவினர் தமது வெளியீடுகளை விற்பனைக்காக வைத்திருந்தனர். பலரும் குறித்த வெளியீடுகளை ஆவலுடன் வாங்கிச் சென்றனர்.
எதிர்வரும் 15.09.2025 திங்கட்கிழமை பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய வாகனப் பேரணி குறித்தும் அறிவிக்கப்பட்டது டன், பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
















