
யாழ்ப்பாணம் அரியாலை – சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக்கோரியும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் வரையிலும் ‘அணையா விளக்கு’ என்னும் போராட்டம் இன்று இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டமானது மக்கள் செயல் என்கின்ற தன்னார்வ இளையோர் அமைப்பால் இன்றிலிருந்து எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் இந்த ‘அணையா விளக்கு’ போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.








