பிரான்சு பாரிசு18 லாச்சப்பல் சோதியா கலைக் கல்லூரியில் 2024/2025 கல்வி ஆண்டு நிறைவு நிகழ்வு!

0
161

பிரான்சு பாரிசு18 லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியில் 2024/2025 கல்வி ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று (22.06.2025) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதம நிர்வாகி திரு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு அகவணக்கத்தோடு ஆரம்பமானது. திருக்குறள் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் தமிழ்மொழி பொதுத்தேர்வு மாணவர்களுக்கும் சான்றிதழ்கள்,வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. மாணவர்களுக்கான மதிப்பளித்தலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு சார்பில் கலந்துகொண்ட திரு.சத்தியதாசன் அவர்களோடு, சோதியா கலைக்கல்லூரியின் ஆசிரியர்கள், பிரதம நிர்வாகி திரு.செல்வகுமார், ஏனைய நிர்வாகிகள் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய திரு.சத்தியதாசன் அவர்கள் பள்ளியின் ஆரம்பகால செயற்பாடுகள் ஆசிரியர்களின் பணி பற்றி குறிப்பிட்ட அதேவேளை, மாணவர்கள் தமிழர்களின் பண்பாடுகளைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் குளிர்பானங்கள் பரிமாறப்பட்டன.

புதிய கல்வி ஆண்டில் நாம் அனைவரும் சிறப்பாகப் பயணிப்போம் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் நேற்று 21.06.2025 சனிக்கிழமை சோதியா கலைக்கல்லூரியின் இளையோர்களோடு தாம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தமை பற்றியும் அச்சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் பிரதம நிர்வாகி தெரிவித்திருந்தார். அனைவரின் நம்பிக்கையோடு புதிய கல்வி ஆண்டில் சிறப்பாகப் பயணிப்போம் என்ற நம்பிக்கை உறுதியோடு நிகழ்வு நிறைவுகண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here