சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தி விபத்து: 6 படையினர் பலி!

0
20

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உலங்கு வானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்ததாகவும் இவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 6;பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாக சிறிலங்கா அரச ஊடகம் இன்று தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here