விமானம் புறப்பட 3 மணி நேரம் முன்னதாகவே வரவேண்டும் ; ஏர் இந்தியா அறிவிப்பு

0
170

Air-Indiaசமீபத்தில் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர், இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தீவிர்வாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்; ‘விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள், உள்நாட்டு விமானம் என்றால் 75 நிமிடங்களும், வெளிநாட்டு விமானம் என்றால் விமானம் புறப்படுவதற்கு முன் 3 மணி நேரம் முன்னதாகவே வரவேண்டும். இதற்கு பயணிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகளின் உடமைகள் அனுமதிக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here