சித்தன்கேணி மூதாளர் வீட்டுக் கொள்ளை தொடர்பில் ஒருவர் கைது!

0
156

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தன்கேணி பகுதியில் வீடு புகுந்து பெண் மூதாளர்களைத் தாக்கி நகை மற்றும் பணங்களைக் கொள்ளையடித்தமை தொடர்பில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை மோப்ப நாயின் உதவியுடனே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (26) வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று காலை மோப்ப நாயுடன் சென்ற தடவியல் காவல்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதன்போது கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட ஓட்டில் காணப்பட்ட மோப்பத்தை கொண்டு காவல்துறை மோப்ப நாய் அங்கிருந்து கொள்ளையர்களைத் தேடிச் சென்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதாளர்களைத் தாக்கிய குறித்த கொள்ளைச் சம்பவம் குறித்து பலரும் தமது ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்ற நிலையில் கொள்ளையன் ஒருவன் பிடிபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here