ஒரு வருடத்தை எட்டியுள்ள போராட்டம் !

0
164

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று மாபெரும் அமைதிப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில், அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ளது.
தொடர்ந்தும் தம்மை நடு வீதியில் போராட வைக்காமல் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here