ஒருவருடத்தை பூர்த்தி செய்யும் காணாமல் ஆக்கப் பட்டோர் போராட்டம்!

0
439


காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை ஒப்­ப­டைக்­கு­மா­று­கோரி நாம் நடத்­தும் தொடர் போராட்­டம் ஒரு வரு­டத்தை எட்­ட­வுள்­ளது. அது பற்­றிய உறு­தி­யான பதில் இன்­னும் எமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இந்த விட­யத்­தில் எமக்கு என்­ன ­தான் தீர்வு?
இவ்­வாறு, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் கிளி­நொச்­சி­யில் நடத்­தி­வ­ரும் போராட்­டத்­தில்  நேற்­றுத் தெரி­வித்­த­னர்.அவர்கள் மேலும் தெரி­வித்­த­தா­வது:
கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆல­ய முன்றி லில் நாம் நடத்­தி­வ­ரும் போராட்­டம் ஒரு வரு­டத்தை எட்­டு­கி­றது.போர்க் காலத்­தி­லும், போர் நிறை­வுக்குக் கொண்டு வரப்­பட்ட பின்­ன­ரும் சிறீலங்கா இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டும், கடத்­தப்­பட்­டும் பல வழி­க­ளில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தங்­க­ளின் உற­வு­க­ளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்­கில் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.
கிளி­நொச்­சி­யில் ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்­டம் எதிர்­வ­ரும் திங்கள்கிழமை 19ஆம் திகதி அன்று ஒரு வரு­டத்தை எட்­டு­கி­றது. இந்­த நிலை­யில் எந்­த­வித தீர்­வு­க­ளும் எட்­டப்­படவில்லை­. ஆகை­யால் எங்­க­ளின் போராட்ட வடி­வத்தை மாற்­றப் போகின்றோம்–என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here