புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி படுகொலை பவள் கவச வாகன சார­திக்­குப் பிணை!!

0
492

புங்­கு­டு­தீவுப் பகு­தி­யில் சிறீலங்கா கடற்­ப­டை­யி­ன­ரின் பவள் கவச வாக­னம் மோதி­ய­தில் பாட­சாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமை தொடர்­பில் கைது செய்­யப்­பட்ட சிறீலங்காக் கடற்­படை சாரதி பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.
புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்­துக்கு அரு­கில் கடந்த 24.01.2018 அன்று சிறீலங்கா கடற்படையின் கவசவாகனம் மேதி ஏற்­பட்ட விபத்­தில் புங்­கு­டு­தீவு ரோமன் கத்­தோ­லிக்க பாட­சா­லை­யில் கல்வி கற்ற மாணவி உயி­ரி­ழந்­தி­ருந்­தார். குறித்த சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய பவள் கவ­ச­வா­கன கடற்­படை சாரதி அன்­றைய தினம் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.
குறித்த வழக்கு ஊர்­கா­வற்­துறை நீதி­வான் மன்­றில் நீதி­வான் ஏ.எம்.எம்.றியாழ் முன்­னி­லை­யில் நேற்று (07) எடுத்து கொள்­ளப்­பட்­டது.
குறித்த மாண­வி­யின் மாம­னார் ஒரு இலட்­சம் ரூபாய் பெறு­ம­தி­யான சரீர பிணை­யில் செல்ல நீதி­வான் அனு­ம­தித்­தார். குறித்த வழக்­கில் சார­தி­யான கடற்­படை சிப்­பா­யும், மாண­வி­யின் மாம­னா­ரும் இணைக்­கப்­பட்டு உள்­ள­மை­யால், அப்­பாவி தண்­டிக்­கப்­ப­டக் கூடாது எனும் நோக்­கம் மன்­றுக்கு உள்­ள­மை­யால், அந்த வழக்­கில் மாம­னா­ருக்கு பிணை வழங்­கப்­ப­டும்­போது என்ன பிணை நிபந்­த­னை­கள் உள்­ள­னவோ அதே பிணை நிபந்­த­னை­க­ளு­டன் சார­தி­யும் பிணை­யில் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றார் என நீதி­வான் தெரி­வித்­தார்.
அத­னை­ய­டுத்து கடற்­படை சார­தி­யும் ஒரு இலட்ச ரூபாய் பெறு­ம­தி­யான சரீர பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.
2009 இற்கு பின்னர் போர் ஓய்ந்துள்ள நிலையில் சிறீலங்கா கடற்படையின் 20 முகாங்கள் தீவுப் பகுதியில் உள்ளன. போர் அற்ற சூழலில் சிறீலங்கா கடற்படையினர் இப்பகுதியில் பாரிய வாகனங்களை போர்ச் சூழல் போல் வேகமா வீதிகளில் சென்று வருவதற்கு எதிரா மக்கள் தொடர்ந்து விசனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here