உறுதிமொழியை நிறைவேற்றாத சிறீலங்கா அரசு !

0
333

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக சிறீலங்கா அரசினால் வழங்கப் பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் சிறீலங்கா ,ஈது குற்றம்சுமத்தியுள்ளது .
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்காமல் இருப்பதால் , குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் சந்தேக நபர்கள் பலர், பல் ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
சிறீலங்கா அரசுடன் இது தொடர்பாக அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நடத்திய போதிலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறீலங்கா லங்கா அரசு மனித உரிமைகளை பாதுகாக்க எண்ணினால், இந்த சட்டத்தை சர்வதேச தரத்திற்கு அமைய உருவாக்க வேண்டும் என கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிரடி அடம்ஸ் கூறியுள்ளார்.
சிறீலங்கா குறித்து 46 பக்கங்களை கொண்ட அறிக்கையில், சிறீலங்காவில் சித்திரவதைகளை மேற்கொள்ள இந்த சட்டம் பிரதானமாக உதவி வருவதாக தெரிவித்துள்ளது . இந்த சட்டம் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சட்டத்தை மாற்றுவதாக சிறீலங்கா அரசால் உறுதி வழங்க பட்டிருந்தது . இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் சிறீலங்கா அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளது எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here