கோத்தபயா கைது செய்வதை தவிர்த்த ரணில்!

0
304

 

சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சா கைது செய்யப்படாமைக்கு காரணம் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே என்று சிறிலங்காவின் ஜனாதிபதி அதி­ர­டி­யா­கத் தெரி­வித்­தார் . மைத்­தி­ரி­பால சிறி­சேன. கோத்­த­பாயவைக் கைது­செய்­ய­வேண்­டாம் என்று தாம் எந்த உத்­த­ர­வை­யும் பிறப்­பிக்­க­வில்லை என்றும் தெரி­வித்­தார் .
நேற்று (26) இடம் பெற்ற நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
கோத்­த­பாய ராஜ­பக்­ச­வைக் கைது செய்­வ­தற்­குத் தேவை­யான ஆவ­ணங்­களை காவல்துறை அதி­ப­ரி­டம் சட்­டமா அதி­பர் வழங்­கி­யி­ருந்­தார். அதைப் காவல்துறை அதி­பர் என்­னி­டம் தெரி­வித்­தார். அப்­போது நான் தலைமை அமைச்சரைத் தொடர்பு கொண்­டேன். அவர் அப்­போது இந்­தி­யா­வில் இருந்­தார். சட்­டமா அதி­பர் செய்த பரிந்­து­ரை­களை மீளாய்­வு­செய்து உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று நான் அவ­ரைப் பணித்­தேன். இந்­தக் கோவை­களை சட்­டத்­த­ரணி ஒரு­வ­ருக்கு வழங்கி அதற்­கேற்ற வகை­யில் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறே நான் சொன்­னேன். என்ன குற்­றச்­சாட்­டு­கள்? அவற்­றின் அடிப்­படை என்ன? என்­ப­தைப் பார்க்­க ­வேண்­டு­மல்­லவா! ஆனால், அவர் அத­னைச் செய்­ய­வில்லை. அப்­ப­டியே மூடி வைத்­து­விட்­டார். இதில் என்­னைக் குற்­றம் சொல்­வ­தில் அர்த்­த­மில்லை’’.-என்­றார் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here