பதுங்­கு­கு­ழி­யில் பதுங்கிய கொள்­ளையார் கைது ! பணம் நகை மீட்பு !

0
242

பதுங்கு குழி­யி­னுள் பதுங்கி இ­ருந்த கொள்­ளைக் கும்­பல் ஒன்­றை கைது செய்­தி­ருப்பதாக சாவ­கச்­சே­ரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் .
கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் நடத்­திய விசா­ர­ணை­யி­லி­ருந்து 3 வீடு­க­ளில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட ஒரு லட்­சத்து 40 ஆயி­ரம் ரூபா பணம் மற்­றும் இரண்­ட­ரைப் பவுண் நகை என்­பன மீட்­கப்­பட்­டன என்­றும் தெரி­வித்­த­னர்.
தென்­ம­ராட்சி தெற்கு மற­வன்­பு­ல­வில் கேர­தீவு முதன்மை வீதி­யி­லி­ருந்து பல உண­வுப் பொதி­க­ளு­டன் ஒரு­வர் சென்­ற­தனை சாதாரண உடை­யில் நின்ற காவல்துறையினர் ஒரு­வர் கண்­டுள்­ளார். அவ­ரைப் பின்­ தொ­டர்ந்து சென்­ற­போது பதுங்கு குழி ஒன்­றில் மேலும் பலர் இருந்­த­தைக் கண்­டார்.
அவர்­கள் மீது சந்­தே­கம் ஏற்­பட்­ட­தால் உட­ன­டி­யா­கப் காவல் நிலை­யத்­துக்­கும் தக­வல் வழங்­கி­னார். அங்கு விரைந்த சாவ­கச்­சேரி காவல்துரையினரைக் கண்­ட­தும் குழி­யி­லி­ருந்த 5 பேரும் தப்­பி­யோ­டத் தொடங்­கி­னர். அவர்களை துரத்­திச் சென்­ற­ன பொது கடல் தண்­ணீ­ருக்­குள் இறங்கி அவர்­கள் தப்­பி­யோ­டி­னர். காவல்துறையினர் கடல் தண்­ணீ­ருக்­குள் இறங்­கித் துரத்­தி­னர். இரு­வர் பிடி­பட ஏனைய மூவ­ரும் தப்­பி­யோ­டி­விட்­ட­னர் என்று தெரிவிக்கப் படுகிறது .
கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் நாவற்­குளி மற்­றும் அள­வெட்­டி­யைச் சேர்ந்­த­வர்­கள். இது­வ­ரை­யான விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து நாவற்­குழி கேர­தீவு வீதி­யி­லுள்ள வீடு­க­ளில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பண­மும் நாவற்­கு­ழி­யில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட நகை­க­ளும் மீட்­கப்­பட்­டுள்­ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்­று­முன்­தி­னம் () கைது செய்­யப்­பட்ட அவர்­கள் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் நேற்று முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­களை 14 நாள்­க­ளுக்கு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு ற நீதி­ மன்றம் உத்­த­ர­விட்­டது .
தென்­ம­ராட்சி தெற்­குப் பகு­தி­யில் நாவற்­குழி தொடக்­கம் தனன்­க­ளப்பு வரை­யான பகு­தி­க­ளில் மூன்ற மாதங்­க­ளாக அடுத்­த­டுத்து பல வீடு­க­ளில் திருட்டு இடம்­பெற்­றது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை தச்­சன்­தோப்பு பகு­தி­யி­லும் மறு­நாள் கைத­டி­யி­லும் நகை­கள் மற்­றும் பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டன.
வீட்­டின் கத­வு­களை கோட­ரி­யால் தாக்­கிச் சேதப்­ப­டுத்தி உள்­நு­ழைந்து அங்­கி­ருந்த குடும்­பங்­களை மோச­மா­கத் தாக்கி கொள்ளை இடம்­பெற்­றி­ருந்­தது குறிப்பிடத் தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here