யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் பிணையில் விடுதலை !

0
286

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் 13 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று(25) வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கு 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை இரவு பல்கலைகழகத்துக்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் 4 சிங்கள மாணவர்களைக் கைது செய்யப்பட்டனர்..
நான்கு பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். தாக்குதல் நடத்தின 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் 9 பேர் கோப்பாய் காவல் நிலையத்தில் நேற்றுச் சரணடைந்தனர்.
அவர்கள் 9 பேரும் நீதிமன்றின் உத்தரவில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
13 மாணவர்களும் இன்று (25) யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது 13 மாணவர்களையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here