கிளிநொச்சியில் உந்துருளி உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து: இளைஞர் பலி!

0
200

கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கராயன் நோக்கிப் பயணித்த உந்துருளி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் உந்துருளியில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளடன், உழவு இயந்திரத்தின் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், உந்துருளியில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here