328 வது நாளாக தொடரும் போராட்டம் காணிவிடுப்பு தொடர்பாக மக்களுடன் முரண்பட்ட சுவாமிநாதன்!

0
187

சிறீலங்காவின் மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தேர்தல் பரப்புரைக்காக முல்லைத்தீவு நாவற்காடு பகுதியில் நேற்று (18) வந்திருந்த போது கேப்பாபுலவில் சிறீலங்கா படையால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள கணிகள் விடுவிப்பது தொடர்பாக கேட்கப்பட்ட போது கண்ணை மூடிக் கொண்டு காணியை விடுவிக்க முடியாது எனத் தெரிவிததுள்ளார். இதன் போது  சிறீலங்கா அமைச்சருடன் மக்களுக்கு வாய்த் தர்க்கம் ஏற்பட்டது.
சிறீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.
காணி விடுப்புக்கான மக்களின் தொடர் போராட்டம் இன்று 328 வது நாளாக நடைபெறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here