சிறீலங்காவின் வாக்­கு­று­தி­கள்- இயக்­க­மற்றே இருக்­கின்­றன!!

0
412

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் நல்­லி­ணக்­கம் என்­பன தொடர்­பாக சிறீலங்கா வழங்­கிய வாக்­கு­றுதி செயலற்ற நிலை­யி­லேயே உள்­ளது. வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காகப் பன்­னாட்­டுச் சாச­னத்­துக்கு இணங்க தயா­ரிக்­கப்­பட்ட சட்­டம் திக­தி­யி­டப் ­ப­டா­மல் உள்­ளமை ஏற்­பு­டை­ய­தல்ல.
உலக நாடு­கள் தொடர்­பாக மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கத்­தின் 2018 ஆம் ஆண்­டுக்­கான அறிக்கை நேற்று வெளி­யி­டப்­பட்­டது. அதில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில் உள்­ள­தா­வது-,
ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் 2017ஆம் ஆண்டு வரை ஊட­கங்­க­ளுக்­கும் மற்­றும் சிவில் சமூ­கங்­க­ளுக்­கும் பொது­வாக செயற்­ப­டு­வ­தற்­கான கத­வு­கள் திறந்­துள்­ளன. ஆனால் 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை வழங்­கிய பொறுப்பு கூறல் மற்­றும் அர­சி­யல் நல்­லி­ணக்­கம் பற்­றிய வாக்­கு­றுதி செயலற்ற நிலை­யி­லேயே உள்­ளது.
சிறீலங்கா அர­சால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளின் பெயர்ப் பட்­டி­யலை வெளி­யி­டும் அரச தலை­வ­ரின் வாக்­கு­றுதி இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக பன்­னாட்­டுச் சாச­னத்­துக்கு இணங்க தயா­ரிக்­கப்­பட்ட சட்­டம் திக­தி­யி­டப்­ப­டா­மல் உள்­ளது.
மத சிறு­பான்­மை­யி­னர் பாது­காப்­பின்மை எனும் அச்­சத்­தில் உள்­ள­னர். 31 ரோஹிங்யா முஸ்­லிம் அக­தி­களை பௌத்த தீவி­ர­வா­தி­க­ளி­டம் இருந்து காப்­பாற்ற அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யி­ருந்­தது. காலி­யி­லும் வவு­னி­யா­வி­லும் முஸ்­லிம்­க­ளுக்­கும் ஏனைய சமூ­கத்­துக்­கும் இடையே வன்­முறை மூண்­டது. முஸ்­லிம்­க­ளின் வீடு­க­ளும் வியா­பார நிறு­வ­னங்­க­ளும் சேத­மாக்­கப்­பட்­டன.
சிறப்பு நீதி­மன்­றத்­தில் வெளி­நாட்டு நீதி­ப­தி­கள் பங்­கேற்­பதை மூத்த அமைச்­சர்­கள் எதிர்க்­கின்­ற­னர். அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் கூட அவ்­வாறே தெரி­விக்­கின்­ற­னர். 2015ஆம் ஆண்டு தீர்­மா­னத்­தின் படி நான்கு தூண்­க­ளில் ஒன்­றாக காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கம் அமை­கி­றது. அரசு இது தொடர்­பாக சட்­டம் இயற்­றி­னா­லும் 2017ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் வரை இது செயலற்ற நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது.
காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரு­க­கான அலு­வ­ல­கத்­துக்­கு­ரிய ஆணை­யா­ளர்­கள் இது வரை நிய­மிக்­க­ப­ட­வில்லை. மனித உரி­மை­க­ளைப் பாது­காப்­போம் என்று சிறீலங்கா அரசு வழங்­கிய வாக்­கு­றுதி செயல்­வ­டி­வம் பெறா­மல் உள்­ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here