யாழ் மீசாலையில் தொடருந்து மோதி இரு பசுமாடுகள் பலி! மாணவி படுகாயம்!!

0
222

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்துடன் மோதுண்டு இரு பசுமாடுகள் உயிரிழந்ததுடன், பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று(16) பகல் குறித்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது புகையிரத பாதையில் புல் மேய்ந்து கொண்டிருந்த இரு பசுமாடுகள்
தொடருந்துடன் மோதுண்டு பல மீற்றருக்கப்பால் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன.

இதன் போது  தூக்கி வீசப்பட்ட பசுக்களிலொன்று மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக நின்றிருந்த  மாணவியுடன் மோதி விழுந்தது. இதனால்,  யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த மாணவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here