வவுனியாவில் வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு!

0
236

வவுனியா, மஹாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.  மஹாறம்பைக்குளம், குட்டிநகர் என்ற பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டில் வசித்து வந்த செல்வம் புஸ்பராணி (வயது 51) மற்றும் அவருக்கு அறிமுகமான பியசேனகே எதிரிசிங்க என்ற இருவருமே தூக்கில் தொங்கியவாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக இரவு முழுவதும் சடலங்களுடன் வீட்டில் தங்கியிருந்த புஸ்பராணியின் சுமார் 5 வயது மதிக்கத்தக்க பேத்தி கூறுகையில்; அம்மம்மாவுடன் மற்றவரும் சண்டை பிடித்த பின்னர் தடியால் தாக்கியதாகவும் அதன் பின்னரே இவ்வாறு கயிற்றில் அம்மம்மாவை தொங்கவிட்டதன் பின்னர் அவரும் தொங்கினார் எனத் தெரிவித்தார்.
இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக வவுனியா மற்றும் மஹாறம்பைக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here